பதவி விலகப் போவதாக ரணிலிடம் கூறினார் மஹிந்த!

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் மஹிந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர், ரணில் விக்ரமசிங்கவை நேற்று நாடாளுமன்ற நூலகத்தில் திடீரென சந்தித்த சந்தர்ப்பத்தில் அவர், தான் இராஜினாமா செய்கின்றமையினால் பிரதமர் பதவி ஏற்குமாறு ரணிலிடம் கூறியுள்ளார்.

எனினும், அவ்வாறு பதவி விலக தேவையில்லை, மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து நீக்கும் வரை தொடர்ந்து செயற்படுமாறும், பிரதமர் பதவியில் நியமித்த ஜனாதிபதியே அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க, மஹிந்தவை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!