ரணிலை சிறையில் அடைப்பதே முதல் வேலை!

எமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதே முதல் நடவடிக்கை என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற மிக பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளி ரணில் விக்கிரமசிங்கவே ஆகவே அவரை கைவிலங்கு போட்டு சிறையில் அடைப்போம். பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளோம். தீர்ப்பு எமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். ஒருவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறென தீர்ப்பு வந்தால் அப்போதில் இருந்து ஆட்சியை கையில் எடுத்துக் கொள்வோம்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது எமக்கும் தெரியும். எனவே வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தி அவசியமா அல்லது நாடு பிளவு பட வேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!