மகிந்தவின் முறையீட்டு மனு தாக்கல்- பரிசீலனை இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதற்கும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாக செயற்படுவதற்கும், தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, இன்று காலை முறையீட்டு மனு ஒன்றை, மஹிந்த ராஜபக்சவின் சட்டவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

எனினும் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!