மகிந்தவும், கருவும் சந்தித்து பேச்சு

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவின் தந்தை டிஎம்பிபி தசநாயக்கவின் இறுதிச்சடங்கின் போதே இவர்கள் சந்தித்துப் பேசினர்.

இதன்போது அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!