நியுகலடோனியாவில் பூகம்பம்- சுனாமி அலைகள்

பசுவிக்கின் நியுகலடோனியாவை பாரிய பூகம்பம் தாக்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி அலைகள் தென்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன

நியுகலடோனியாவின் லோயல்டி தீவுகளில் உள்ள டடின் என்ற நகரை பூகம்பம் தாக்கியுள்ளது.

டடின் நகரை தாக்கிய பூகம்பம் 7.5 ஆக பதிவாகியுள்ளது .

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுனாமி அலைகளை அவதானிக்க கூடியதாக உள்ளது பசுவிக் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மூன்று சிறிய அலைகளை அவதானிக்க முடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!