கருவில் சுமந்து பெற்ற குழந்தையை கள்ளக்காதலிற்காக கொடூரமாக கொலை செய்த தாய்

இந்தியா, கரூரில் பரளி என்னும் கிராமத்தில் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரம்யா எனும் 24 வயது தாயிற்கு வேத வர்ஷினி என்ற 3 வயது மகள் உள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரம்யா.

இவர்களது வாழ்க்கை நல்ல விதமாகவே நகர்ந்துள்ளது. இந்நிலையில் மணிமாறன் என்பவருடன் ரம்யாவிற்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கவணர் எவ்வளவோ தடுத்தும், தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் தொடர்பில் இருந்ததால் கணவனை வெறுத்து மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தையே வேத வர்சினி.

மறுபடியும், ரம்யாவுக்கும் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா இன்று தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, தானும் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற விபரீதம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!