பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்குப் பொறுப்பானவராக இருந்த ஜெயதிலக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காவல்துறை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக, மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, நாலக டி சில்வா, சிறிலங்கா அதிபர் மற்றும் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!