மைத்திரிக்கு உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுக்கும் பாதுகாப்புப் பிரிவுகள்?

நாடு தற்போது அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த அணி வலியுறுத்தியுள்ளது.

முப்படைகளினதும் தலைமை தளபதி என்ற வகையில், சிறிலங்கா அதிபரிடம், மகிந்த அணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்புத் துறையின் சில பிரிவுகள், சிறிலங்கா அதிபரின் கட்டளைகளுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தயக்கமின்றி உடனடியாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!