பிரேரணையை நிராகரிக்கிறது மகிந்த அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிராகரித்துள்ளது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயகமற்ற, சட்டவிரோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் வெறுமையானதே. அதனால் தான், நாங்கள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கிறோம்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய ஐதேகவுக்கு சார்பாக- அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறார். இது ஜனநாயக விரோதமானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!