30 ஆவிகள் என்மேல் புகுந்ததால் 300 பெண்களை கற்பழித்தேன் – மதபோதகர் துணிகரம்.

பிரேசிலில் கடவுளின் தூதர் என்று அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் மதபோகராகவும், மனநல டாக்டராகவும் பனியாற்றி வருகிறார். இவர் ஆன்மீக முறையில் மனநல நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்து வந்தது.

இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜவாகோ மீது சில மாதங்களுக்கு முன் அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரேசில் போலீசார் அந்த மதபோதகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் கூறுகையில், 30-க்கும் மேற்பட்ட டாக்டர்களின் ஆவி என் மீது புகுந்து விட்டது. அதனால் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இந்தநிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!