தேர்தலில் போட்டியிட எந்த பயமும் இல்லை: – விஜயபிரபாகரன்

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் பெற பிரார்த்தனை நடந்தது. விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார். ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும். தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்த பயமும் எனக்கு இல்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்கு சுதீப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பிரச்சனை இருப்பதாக கூறுவது வதந்தி.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ, நல்ல தம்பி, பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!