நீதிமன்றத்தின் தலையீடுகள் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது – வாசுதேவ

பாராளுமன்றத்தின் விடயங்களில் நீதிமன்றத்தின் தலையீடுகள் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தற்போதைய அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதற்கு பலமான எதிர்க்கட்சி தடையாக செயற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கம் ஒன்று காணப்படாத பட்சத்தில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை 30 ஆக காணப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் குறிபபிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது கட்சிக்குள் காணப்படுகின்ற பதவிநிலை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அரசியலமைப்பினை மீறி செயற்பட முயற்சிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!