பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது.

ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த காரணத்தால் அப்பகுதியிலுள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கி.மீ .தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதனை ஒட்டியுள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!