பதவியேற்றார் புதிய கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படையின் 23 ஆவது தளபதியாக, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, கடற்படைத் தளபதிக்குரிய அதிகாரபூர்வ வாளை, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் கையளித்தார்.

இதையடுத்து, அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை வழியனுப்பும நிகழ்வும், புதிய கடற்படைத் தளபதிக்கான வரவேற்பு மற்றும் பதவியேற்பு நிகழ்வும் இடம்பெற்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!