29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மினுவங்கொடவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாட்டில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு நீதியான கட்சியாக உள்ளது.

நான் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டேன்.

2015 ஜனவரி மாதமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!