அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து!

ஒருசில காரணங்களுக்காக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்படவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தலிபான் தீவிரவாதிகள் இரத்து செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டனர்.

குறித்த பேச்சுவார்த்தைக்கு தலிபான் தீவிரவாதிகளும் சம்மதம் தெரிவித்தனர். தலிபானியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டார் தலைநகர் தோகாவில் இடம்பெறவிருந்த இப் பேச்சுவார்த்தையானது இரு நாட்களாக நேற்று ஆரம்பமாகவிருந்தது.

இந் நிலையில் தலிபான்யர்கள், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க்க உள்ளதை காரணம் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறி ரத்து செய்து விட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!