சவுதி அரேபிய பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது!

சவுதி அரேபியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பேங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவுதி பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது. 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சவுதி பெண் பேங்கொக் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்தார். அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால் குவேட்டுக்கு திரும்ப வேண்டுமென ஆரம்பத்தில் அவரிடம் கூறப்பட்டது. அதற்கு மறுத்துவிட்ட அவர், விமான நிலையத்தின் விருந்தக அறையை விட்டு வெளியே வராமல் தன்னைதானே சிறைப்படுத்திக் கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

இஸ்லாம் மதத்தை தான் துறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு இஸ்லாத்தை துறப்பது சவுதி அரேபியாவில் மரண தண்டனை பெறும் குற்றமாகும். இந்தநிலையில், அவர் அகதியாக ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர் என ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமை தெரிவித்தது.

அகதிகள் தகுதி நிலை வழக்கமாக அரசாங்கங்களால் வழங்கப்படுகின்றன. ஆனால், நாடுகளால் இதனை வழங்க முடியாத பட்சத்தில் அல்லது அகதி அந்தஸ்து கொடுக்க விரும்பாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையே அதனை வழங்கலாம் என்று ஐ.நா.வின் இணையதளம் தெரிவிக்கிறது.

இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக தீர்மானங்களை எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளது. ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் எங்களிடம் கேட்டுக்கொண்ட போது, நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, குறித்த 18 வயதான சவுதி பெண், கனடாவுக்கு செல்லும் வழியில் சியோலில் இருந்து சனிக்கிழமை விமானத்தில் உள்ளே எடுக்கப்பட்ட ஔிப்படங்களை வௌியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஔிப்படங்களை “#3rd country” and “#i_did_it” – தனது 3 வது நாடு – நான் சாதித்து விட்டேன் என்ற ஹேஷ் டேக்குகளுடன் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!