வடக்கிற்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை!

காலநிலை மாற்றத்தினால், வட மாகாணம் கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

“வடக்கு மாகாணமானது மோசமான பாதிப்புற்ற பிரதேசமாகும், மழை பற்றாக்குறை, வெள்ளம் மற்றும் கடலால் சூழப்பட்ட வடக்கு மாகாணத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதற்கான நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, மாகாணத்தை அத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு நடைமுறை தேவை” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!