இந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்தும் அண்மையில் பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகள் நடுக்கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானதில் பலியான மீனவர் முனியசாமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்ப வறுமையால் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் உள்ப்பட 19 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுமார் 1.5 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதுடன் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!