சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றியவர் ரணில்!

எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபடுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சி இடமளிக்காது என்று அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு இடமளிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்த காரணத்தினால் தான், இன்று எந்தவொரு குற்றவாளியும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செலலப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!