மஹிந்த மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு!

போர் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினாலேயே வடக்கு, கிழக்கில்போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு இந்துக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சட்டக்கல்வி மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!