நேர்மையான வழியிலேயே பேசுகிறது கூட்டமைப்பு!

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்படிக்கையையும் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான வழியில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது. உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பினை பயன்படுத்துகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இரகசிய உடன்படிக்கை என்ற கட்டுக்கதை கட்டி ஆட்சியை வீழ்த்த முயற்சித்து வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்றதும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாகும். அவர்கள் ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்ல. இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!