500 ஏக்கர் வெள்ளாங்குளம் பண்ணைக் காணி விடுவிப்பு!

மன்னார், மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த காணிகளில் 500 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வெள்ளாங்குளம் பண்ணை படையினர் வசம் இருந்தது. குறித்த பண்ணையில் 500 ஏக்கர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!