திருடப்பட்ட காரிலிருந்த குழந்தையை பத்திரமாக மீட்ட பொலிஸார்!

கனடாவின் கல்கரி பகுதியில் திருடப்பட்ட காரிலிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் கல்கரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று உள்ளுார் நேரப்படி இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 2.25 மணியளவில் திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட காரில் ஆறு மாத குழந்தை ஒன்றும் காணப்பட்ட நிலையில், விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் சில மணித்தியாலங்களிலேயே திருடப்பட்ட காரை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருடப்பட்ட காரிலிருந்த குழந்தையை பத்திரமாக மீட்ட பொலிஸார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன், குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!