14 ஆண்டுகளாக கோமாவிலிருந்த பெண் குழந்தை பிரசவிப்பு ; சந்தேகநபர் சிக்கினார்

14 ஆண்டுகளாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண் தாதியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 29 வயதான பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந் நிலையில் அவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி குழந்தையொன்றை பிரசிவித்துள்ளார். இது அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற கோணத்தில் பொலிஸார் உண்மையை கண்டறிவதற்காக வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்போதேபே கோமாவில் இருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததற்கு வைத்தியசாலையில் பணிபுரியும் 36 வயதுடைய ஆண் தாதியர் ஒருவர் காரணம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து பீனிக்ஸ் நகர பொலிஸார் அவரை கைது செய்ததுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!