அங்குணுகொலபெலஸ்ஸ சம்வபம்:அறிக்கையில் தாமதம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அக் குழுவின் அறிக்கை நேற்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட இருந்தநிலையில் அக் குழுவினால் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிதத சம்வத்துடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்ததும் அடுத்த வாரத்தில் அறிக்கையை தயாரித்து சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!