ஸ்ரீநகர் மாநிலத்தில் இரண்டு கிளர்ச்சியாளர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு முக்கிய நகரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஸ்ரீநகரின் கொன்மாக் பகுதியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத போது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சியுடன் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனினும் கிளிர்ச்சியாளர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!