அமெரிக்காவுடன் எந்த பாதுகாப்பு உடன்பாடும் இல்லை! – ருவன் விஜயவர்தன

இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைப்பது பற்றி எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல நாடுகளுடன் பாதுகாப்பு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பினும் அமெரிக்காவுடன் இதுவரையில் எவ்வித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!