51 நாள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட துறைமுக கட்டணத்தை மாற்றிய அமைச்சர்

இலங்கை துறைமுக அதிகாரசபை சேவைகளின் மற்றும் ஜயபாலு முனைய நிறுவண கட்டணங்களை மீள் அமைக்கும் பொருட்டு முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தீர்மானித்துள்ளார்.

துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் துறைமுக துறையின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் இக்கட்டண மீள் அமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!