சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கப்படாது! – ஐதேக திட்டவட்டம்

????????????????????????????????????
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது என ஐக்கிய தேசிய கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அந்த கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படுமானால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியாக அது அமையப் போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளுக்கு ஏற்றவகையிலான தனித்துவமிக்க தேசிய அரசாங்கமொன்றே உருவாக்கப்படும். மாகாண சபை தேர்தல் எந்த முறையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே இம்முறை எந்த தேர்தல் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும் வெற்றி கிடைக்கும்“ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!