மன்னார், முல்லைத்தீவில் தீயணைப்புப் படை!

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அடுத்த ஓரிரு தினங்களில் தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமிசங்க தெரிவித்தார். இம்மாவட்டங்களில் தீயணைப்பு படைப்பிரிவை செயற்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதனினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!