“பஷில் எந்தக் கருத்தையும் முன்வைக்கலாம் ; ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இணைந்தே தீர்மானம் ”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தக் கருத்தினையும் முன்வைக்கலாம்.

எனினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய தகுதியான வேட்பாளர் தொடர்பில் அனைவரும் இணைந்தே தீர்மானமொன்றினை மேற்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே வேட்பாளர் களமிறக்கப்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!