“கோத்தாபய, பசில், சமல் ; யார் களமிறங்கினாலும் தோல்வி உறுதி”

கோத்தாபய, பசில், சமல் ஆகிய மூவரில் யார் வேட்பாளராக களமிறங்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உறுதி எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே சவாலான கட்சியாக விளங்குமே தவிர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எமக்கு சவால் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!