திருநங்கையின் தலை துண்டித்து கொலை!

தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து அத்துமீறிய நிர்வாகியை தட்டிக்கேட்ட திருநங்கையான பூசாரி, தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தேவி ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற திருநங்கை பூசாரியாக பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்த இராசாத்தியை மோட்டார் சைக்களில் வந்த இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். தலையை துண்டித்து எடுத்துச்சென்ற கொலையாளிகள், மற்றொரு பகுதியில் தலையை வீசிச்சென்றனர்.

ராசாத்தி கொலை தொடர்பாக மாரியம்மன் கோவிலை கட்டிய மூதாட்டியின் பேரன் மருது என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது, கொலைக்கான காரணம் தெரியவந்தது.

மூதாட்டிக்கு பின்னர், குறித்த கோவியிலில் பூசாரியாக இருந்து திருநங்கை ராசாத்தி நிர்வாகித்து வந்துள்ளார். மூதாட்டியின் பேரன் மருது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராசாத்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதால் குறித்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.

கோவிலில் கிடைத்த வருமானம் மூலம் மருதுவுக்கு கோவிலுக்கு அருகில் பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார் இராசாத்தி.

இந்நிலையில் இசாத்தியை சந்திக்க வரும் திருநங்கைகள் சிலரிடம் மருது அத்துமீறுவதை வழக்கமாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில் கோவிலுக்குள் குறித்த நிகழ்வுகள் நடப்பதை அறிந்த ராசாத்தி, மருதுவை எச்சரித்ததோடு கோவில் நிர்வாகத்தில் இருந்தும் விரட்டியடித்துள்ளார்.

மேலும் கோவிலின் வரவு செலவுகளையும் இராசாத்தி பார்த்து வந்துள்ளார்.

கோவில் மூலம் கிடைத்த வருமானம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மருது தனது கூட்டாளியுடன் சென்று இராசாத்தியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலையை எடுத்துக் கொண்டு தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மருதுவை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

பொலிஸார் மேற்கொண்ட போது குறித்த சம்பவத்துக்கு கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளியை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!