வடக்கிற்கு பொருளாதார சுதந்திரம் கோருகிறார் ஆளுநர்!

பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின் அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது. எனவே, வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார். நேற்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘வடமாகாணத்தில் இருந்து 25 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது. இதில் சுமார் நான்கு சதவீதம் மாத்திரமே எமது மாகாணத்திற்கு எடுத்து கொள்ளுகிறோம். இவ்வாறான நிலையினை உயர்த்த வேண்டியது, காலத்தின் தேவை. எனவே இதற்கு அர்பணிப்புடன் அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும்.

96 வீதமான அபிவிருத்திக்கான நிதி மத்திய அரசாங்கத்திடம் இருந்து தான் கிடைக்கின்றன. 25 பில்லியனில் 15 பில்லினை கல்விக்காக முன்னேடுக்கின்றோம். அதில் மீளவருகின்ற செலவுக்காக திருப்பி திருப்பி செய்கின்றோம். இதில் கல்வி வளர்ச்சி,புதிய கட்டிடங்கள், ஆராச்சிக்காக இவ் பெருந்தொகை நிதியினை எடுக்கின்றோம்.

பாரிய பிரச்சினையாக சுகாதாரத்துறை இருக்கின்றது. மேலதிகமாக வடமாகாணத்தில் 05 அமைச்சுகள் உள்ளன. வடமாகாணத்தில் விவசாயத்துறைக்கான மூதலீடுகளை செய்ய வேண்டும்.புதிய விவசாய முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். கல்வியும்,சுகாதாரமும் உழைக்க முடியாது .

விவசாயம் என கூறப்படுகின்றபோது மண் சார்ந்த விவசாயம்,அல்ல தண்ணீர் சார்ந்த விவசாயம் இல்லை. விவசாயத்துறையும், மீன்வளத்துறையினையும் வேலைவாய்ப்பு எதிர்நோக்கின்ற பட்டதாரிகளோ, குறிப்பிட்ட இரு துறைகளுக்கும் முகம் கொடுக்க முன்வருவதில்லை. இதனை நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர்களே இவ்வாறான விடயத்தினை பட்டதாரிகள் சமூகத்திடம் முன்வைக்கவேண்டும்.

உதாரணமாக உல்லாசத்துறை எடுத்து நோக்கின்ற போது பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். புலம்பெயர்ந்தோர்கள், இங்கு வருகின்றனர். இவர்களை இலக்காக கொண்டு யாழ் உற்பத்தி பொருட்களின் பயன்பாட்டினை வெளிப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையத்தில் கண்காட்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!