மகாராஷ்ட்ராவில் அரசு பேருந்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு!

மும்பையில் பஸ்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் ஒரு மாநில போக்குவரத்து பஸ்சில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகுந்த சேதம் ஏற்பட்டு இருக்கும்.

மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு குழு இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் குழு வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளது. இதனை அடுத்து அந்த மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!