38 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு கிடைத்த வெகுமானம்

கொலை குற்றச்சாட்டிற்காக தண்டனையை அனுபவித்த நிரபராதியொவருக்கு 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெகுமானமாக வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகள் சிறையில் தண்டனையை அனுபவித்து, தற்போது அவர் நிரபராதி எனத் தெரியவந்துள்ளதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடுடாக வழங்கப்பட்டுள்ளது.

71 வயதான கிரேக் கோலே என்னும் நபர் தனது முன்னாள் தோழி மற்றும் அவரது மகனை கொலை செய்ததாக கூறி கடந்த 1978 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என்பதை கிரேக் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில் அவரது வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதன்போது அவரது டி.என்.ஏ மாதிரியின் மூலம் குறித்த கொலை சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு ஒருவர் விடுவிக்கப்படுவது கலிபோர்னியாவில் வராற்றில் இதுவே முதல் முறையாக இருக்குமென்று கருதப்படுகிறது.

இந்நிலையில், நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்றமுடியாவிட்டாலும், அவருக்கு நிவாரண தொகையை அளிப்பதன் மூலம் குறித்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!