“மக்களை ஏமாற்றுவதற்காக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுகிறது இந்தியா”

இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக, பயங்கரவாத முகாம்களை அழித்ததாக ஆதாரமற்ற செய்தியை இந்தியா பரப்புவதாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை ஜம்முகாஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு பகுதியில் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதுவரை பாகிஸ்தான் தற்காலிய வெளியுறவு செயலாளர் நேரில் வரவழைத்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் பாகிஸ்தானின் பிராந்திய இறையாண்மையை மீறி, பாகிஸ்தானுக்குள் இந்திய விமானங்கள் ஊடுருவியது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியதுடன், இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் தாங்களே முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!