இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைக்குமாறு இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதனால் அதில் இருந்த சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் பிடிபட்டார்.
இதுபற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில்,
இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தப்படி அவர் நடத்தப்படுவார் என்றும் கூறினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் வெளிவிவகார துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!