ஹமில்டனில் பலத்த பனிப்பொழிவு – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹமில்டனில் பலத்த பனிப்பொழிவு காணப்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் சிறப்பு வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது இருப்பினும் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பேருந்துகள் சேவைகளில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலையில் ஆரம்பமாகும் பனிப்பொழிவு இரவு முழுவதும் தொடரும் என்றும், இதன்போது 15 சென்ரிமீட்டர் வரையில் பனி பொழியக்கூடும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக வாகன சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!