“ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்”

பொய்யான குற்றச்சாட்டை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவப் பெயரினை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வகும்பர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கைன் போதைப் பொருளினை பாவித்துள்ளார்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு இன்று பொய்யானது என்றே குறிப்பிட வேண்டும்.

இவ் விசாரணைகளை முன்னெடுத்த குழுவினர் ஐக்கிய தேசிய கட்சியினர். ஆகவே அவர்கள் ஒருபோதும் கட்சிக்கு எதிராக செயற்படமாட்டார்கள்.

இந் நிலையில் அவரின் குற்றச்சாட்டு உண்மை தன்மையற்றது என்ற நிலைப்பாடே தற்போது காணப்படுகின்றது.பொய்யான குற்றச்சாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மக்கள் மத்தியில் அவமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!