தமிழ் மக்களின் பிரச்சினையில் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை! – ரம்புக்வெல

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் எந் நிலையிலும் கருத்துரைக்கவில்லை. வடக்கு மக்களை காரணம் காட்டியே அவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!