ஜனாதிபதிக்கு மல்டி பரல் ரொக்கட் லோஞ்சர்!

இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மல்டி பரல் ரொக்கட் லோஞ்சர் மற்றும் அதற்கான ஏவுகணை மாதிரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டன.

கடந்த கால யுத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது மல்டி பரல் ரொக்கட் லோஞ்சர் மற்றும் ஏவுகணை கடந்த 71ஆவது தேசிய தின விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வா,இதன் மாதிரிகளை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!