வலி.வடக்கில் 30 ஏக்கர் காணிகள் நாளை மறுநாள் விடுவிப்பு!

வலி.வடக்கு பிர­தேச செய­லர்பிரி­வில் இராணுவத்தினரின் பிடியில் இருந்த 30 ஏக்­கர் காணிகள் மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தி­னம் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளில் மக்­கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்­றும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடு­விப்­புக்­கான பத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர். காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!