புதிய அரசியலமைப்பு, ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பு!

புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்­மா­னம் ஆகி­யவை தொடர்­பில் ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எதிர்­வ­ரும் 5ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பில் கூடவுள்ளது. புதிய அர­சியல­மைப்­பில் முக்­கிய விட­யங்­க­ளான தேர்­தல் முறைமை, நிறை­வேற்று அதி­கா­ரம் என்­பன தொடர்­பில் கட்­சி­கள் இடையே பொது இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் மட்­டும் கட்­சி­கள் இடையே இணக்­கப்­பாடு – ஒரு­மித்த கருத்து நில­வு­வ­தால், அதி­கா­ரப் பகிர்வை மட்­டும் அர­ச­மைப்­பி­னுள் எப்­படி புகுத்­து­வது – அத­னைச் செயற்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 4 பேர் கொண்ட புதிய குழு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நேற்­று­முன்­தி­னம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு மேலும் இரண்டு ஆண்­டு­கள் கால அவ­கா­சம் வழங்­கும் வகை­யி­லான தீர்­மான முன்­வ­ரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சியல­மைப்பு, ஐ.நாவின் கால அவ­கா­சம் ஆகி­யவை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வெவ்வேறு நிலைப்­பா­டு­க­ளில் உள்­ள­னர்.

இவை தொடர்­பில் ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எதிர்­வ­ரும் 5ஆம் திகதி ஆராயவுள்ளது. அன்று பிற்­ப­கல் ஒரு மணிக்கு நாடா­ளு­மன்­றம் கூடு­கின்­றது. அதற்கு முன் காலை­யில் அல்­லது மாலை­யில் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நடை­பெ­றும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!