மதுபோதையில் பெண் மீது மோதிய லால்காந்த கைது!

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான கே.டி.லால்காந்த அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!