புலிகள் போர்க்குற்றம் புரியவில்லையா – ஜி.எல்.பீரிஸ் கேள்வி

?????????????????????????????????????????????????????????
பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா என கேள்வி எழுப்பிய பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இராணுவத்தினரை குற்றவாளியாக கருதும் மேற்குலக நாடுகளின் அபிப்பிரயாயங்களுக்கு மனித மனித உரிமை பேரவை இணக்கம் தெரிவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது ஒருதலைபட்சமான செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆயுதமேந்தி போராடிய பயங்கரவாத அமைப்புடன் நாட்டுக்காக போராடிய இராணுவத்தினரை ஒருமித்து மதிப்பிடுவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!