மாற்றுத்திறனாளியின் கண்களின் மீது மிளகாய்ப்பொடியை தூவிய காவலர்!

பிரான்சில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி மீது மிளகுப்பொடியை தூவிய காவல்துறை அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரான்ஸின் முக்கிய இடங்களில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டவ்லாஸ் என்ற இடத்தில் போராட்டக்காரர்களை தடுத்த காவல்துறை அதிகாரியை, மாற்றுத்திறனாளி ஒருவர் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவல்துறை அதிகாரி தன்னிடம் இருந்த மிளகுப்பொடியை, மாற்றுத்திறனாளியின் கண்களில் ஸ்பிரே செய்தார். காவலதிகாரியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!