“13 வயது சிறுவன் ஓட்டிய கார் விபத்து” – மூவர் படுகாயம்!

ஒன்ராறியோ அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். ஓக்வில்லி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 13 வயதான சிறுவன் செலுத்திய கார் ஒன்றே வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் உள்ளிட்ட காரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதியான 13 வயதுடைய சிறுவன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!