சட்டபூர்வமான புலனாய்வு செயற்பாடுகளையே முன்னெடுத்தோம் – என்கிறார் கோத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் தனது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவையாகவே இருந்தன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் “எலிய” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின.

அந்த காலத்தில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்களின் செயற்பாடு மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை.

சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில், வெள்ளை வான் கலாசாரம் இருக்கவில்லை.

என்னைப் பற்றியும் எனது சகோதரர் மகிந்த ராஜபக்சவைப் பற்றியும் – முஸ்லிம்களுக்கு எதிரான தேசியவாதிகள் என்று தவறான படத்தைக் காண்பிக்க சிலர் முற்படுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!